×

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டி போட்டு 8 பவுன் நகை கொள்ளை

காடையாம்பட்டி, ஏப்.23: காடையாம்பட்டி அருகே உம்பிலிக்கம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சாந்தி(55). ராமசந்திரன் இறந்து விட்டார். இவர்களுக்கு சிவசந்திரன், அருண்குமார் என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சாந்தி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை, சாந்தி வீட்டில் இருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 30வயது மதிக்கத்தக்க 3 பேர், அவரது வீட்டிற்குள் நுழைந்து குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். சாந்தி தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்ற போது, பின் தொடர்ந்து சென்ற 3 பேரும், கத்தியை காட்டி மிரட்டி, அவரை கட்டி போட்டனர். பின்னர், அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் நகை பறித்து கொண்டனர். மேலும் பீரோ சாவியை பறித்து, அதில் இருந்த 3பவுன் வளையல், பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ெசன்றனர். பின்னர் கயிற்றை அவிழ்த்து கொண்டு வெளியே வந்த சாந்தி, நடந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்களிடம் கூறினார். பின்னர், தீவட்டிப்பட்டி ேபாலீஸ் ஸ்டேஷனில் அவர் கொடுத்த புகாரின் ேபரில், ஓமலூர் டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Tags : home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு