இளம்பிள்ளை, ஏப்.23: இளம்பிள்ளை அருகே புளியம்பட்டி சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் மீது, கடந்த சில நாட்களுக்கு முன் கார் ஒன்று மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. தற்போது, கோடை மழை பெய்வதையொட்டி, இளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றும் வீசி வருகிறது. அப்போது மின்கம்பம் கீழே விழுந்தால் அசம்பாவிதம் நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அசம்பாவிதம் நிகழும் முன்பாக, உடைந்த மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என இப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.