கல்லூரி மாணவி மாயம் மேச்சேரி அருகே

மேச்சேரி, ஏப்.23: மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டி கஞ்சான் தெருவை சேர்ந்தவர் மணிவேல்(25). இவர் கடந்த 10மாதங்களுக்கு முன், உடையானூர் பகுதியை சேர்ந்த நந்தினி(20) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நந்தினி ஓமலூர் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், பிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். திருமணத்திற்கு பின்னும், கல்லூரிக்கு அரசு பஸ்சில் சென்று வந்தார். நேற்று முன்தினம், வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற நந்தினி, இரவு வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மணிவேல், பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மேச்சேரி ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: