ஈரோடு, ஏப். 23: எஸ்.பி.அலுவலகத்தில் காத்திருப்பு அறை இல்லாததால் புகார் அளிக்க வரும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தினமும் மனு அளிக்க வருகின்றனர். எஸ்.பி.யை சந்தித்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் காத்திருப்பதற்காக எஸ்.பி.அலுவலகத்தின் முன்புறம் காத்திருப்பு அறை இருந்தது.
மேலும் பொதுமக்கள் அதிகமாக திரண்டு வந்து மனு அளிக்கும்போது அவர்கள் ஒதுங்குவதற்கு இடம் இல்லை.இதனால் மாவட்ட எஸ்.பி.யாக சிபிசக்ரவர்த்தி இருந்தபோது எஸ்.பி.அலுவலகத்தின் முன்புறம் பொதுமக்கள் காத்திருக்கும் வகையில் ஒரு ஷெட் அமைத்து கொடுத்தார்.ஆனா அவர் மாற்றலாகி சென்ற பிறகு அந்த ஷெட்டில் போலீசார் வாகனங்களை நிறுத்தி கொள்கின்றவர். இதனால் பொதுமக்கள் எங்கே அமருவது என தெரியாமல் அந்த பகுதியையே சுற்றி வருகின்றனர்.