கல்லை தூக்கி போட்டு வாலிபரின் கால்களை உடைத்த 2 பேர் கைது

ஓமலூர், ஏப்.23: ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், கல்லை தூக்கி போட்டு வாலிபர் கால்களை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓமலூர் அருகே செங்கனூரைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி(28), பங்காரு ராஜூ(32). இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இந்நிலையில், பங்காருராஜூவிடம் செல்போன் இல்லாததால், அவரது மனைவி சுசீலா(28) என்பவரிடம் கந்தசாமி வேலை பற்றி கூறுவதற்காக அடிக்கடி போன் செய்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த பங்காருராஜூ, கந்தசாமியை பலமுறை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், பங்காரு ராஜூ தனது உறவினரான ஆனந்தகிருஷ்ணன்(28) என்பவருடன் சேர்ந்து, கந்தசாமியை மது குடிக்க அழைத்து சென்றார். அப்போது இருவரும், போதையில் இருந்த கந்தசாமியின் கால்கள் மீது கல்லைப்போட்டு கால்களை உடைத்து விட்டு தப்பியோடி விட்டனர். அருகில் இருந்தவர்கள் கந்தசாமியை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பங்காருராஜூ, கிருஷ்ணன் இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: