ஓமலூர், ஏப்.23: ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், கல்லை தூக்கி போட்டு வாலிபர் கால்களை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓமலூர் அருகே செங்கனூரைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி(28), பங்காரு ராஜூ(32). இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இந்நிலையில், பங்காருராஜூவிடம் செல்போன் இல்லாததால், அவரது மனைவி சுசீலா(28) என்பவரிடம் கந்தசாமி வேலை பற்றி கூறுவதற்காக அடிக்கடி போன் செய்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த பங்காருராஜூ, கந்தசாமியை பலமுறை கண்டித்துள்ளார்.