ஈரோடு, ஏப். 23: வாக்கு எண்ணும் மையம் மற்றும் கட்டுப்பாடு அறையினை கலெக்டர் கதிரவன் நேற்று பார்வையிட்டார். ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 1678 வாக்குசாவடி மையங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு இயந்திரங்கள் ஈரோடு அடுத்துள்ள சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு பதிவு மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கதிரவன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.