மழைக்கு அரசு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம்

ஈரோடு, ஏப். 23:      ஈரோடு காந்திஜி ரோட்டில் ஜவான் பவன் என்ற பெயரில் அரசு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் முன்னாள் படை வீரர்கள் அலுவலகம், வருவாய் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரோட்டில் கடந்த 20ம் தேதி நள்ளிரவு பெய்த கனமழையால் காந்திஜி ரோட்டில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டது. இதற்கிடையில் நேற்று ஜவான் பவன் கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள் மழை ஈரத்தில் ஊறி, ஓடையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மண்சரிவு ஏற்பட்டு கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள் இடிந்து ஓடையில் விழுந்தது.

 இதுகுறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டபோது, நேற்று முன்தினம் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள் வலுவிழந்து, நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். பொதுப்பணித்துறையினர் தான் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுப்பார்கள், என்றார்

Related Stories: