பவானி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி

கோபி, ஏப். 23:   திருப்பூர் மாவட்டம் குமரன் காலணியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (18). பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் மனோஜ்பிரபு கோபியில் வசித்து வருகிறார். மனோஜ் பிரபுவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக முகமது இப்ராகிம், அவரது நண்பர் ராஜேஸ் ஆகியோர் கோபி சென்றுள்ளனர். மூன்று பேரும் வரட்டுப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள பவானி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக முகமது இப்ராகிம் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற போது சுழலில் சிக்கி கொண்டார்.   இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று முகமது இப்ராகிமின் உடலை மீட்டனர்.

Related Stories: