×

திருவாரூர் அருகே கைப்பிடி சுவர் இன்றி சேதமடைந்த நடை பாலத்தால் மக்கள் அவதி

திருவாரூர், ஏப். 23: திருவாரூர் அருகே நாகை சாலையிலிருந்து காணூர்  கிராமத்தை இணைக்கும் நடை பாலத்தை  சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரிலிருந்து நாகை செல்லும் வழியில் காணூர்  கிராமம் இருந்து வருகிறது. நாகை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இந்த கிராமத்திற்கு ஓடம் போக்கி ஆற்றை கடந்துதான்  செல்ல வேண்டும் என்ற நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த  ஆற்றின் குறுக்கே நடைபாலம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது இந்த பாலமானது சேதமடைந்து அதன் கைப்பிடிகள் போன்றவையும் இல்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த பாலத்தை பயன்படுத்தி வரும் காணூர், கல்லிக்குடி, ஓடாச்சேரி, பழையவலம், குருமானங்குடி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் அச்சத்துடன் சென்று வரும் நிலை இருந்து வருகிறது. எனவே இந்த பாலத்தினை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : bridge ,Tiruvarur ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!