×

பைக் மீது வேன் மோதி செக்யூரிட்டி பலி





திருவாரூர், ஏப். 23: திருவாரூர் அருகே பைக் மீது சரக்கு வேன் மோதியதில் தனியார் தொழிற்சாலை செக்யூரிட்டி பரிதாபமாக இறந்தார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஏரக்காலி தெரு நாகக்குடையான் குளக்கரையை சேர்ந்தவர் உலகநாதன்(60). இவர் மன்னார்குடி வாஞ்சியூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். தினந்தோறும் வேலை முடிந்ததும் பைக்கில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று மாலை வேலை முடிந்து பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் மகிழஞ்சேரி என்ற இடத்தில் உலகநாதன் வந்து கொண்டிருந்தார். எதிரே வந்த அடையாளம் தெரியாத சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் உலகநாதனின் பைக் மீது மோதிய வேன் வேகமாக தப்பி சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த உலகநாதன் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிந்து தப்பி சென்ற சரக்கு ேவன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு