பொன்னமராவதி, ஏப்.23: பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சித்திரை முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம். இதனடிப்படையில் நேற்று முன்தினம் பூச்சொரிதல் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பாதுகாப்பு அளிக்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பூச்சொரிதல் விழா நிறுத்தப்பட்டு அடுத்த மாதம் 5ம் தேதி பூச்சொரிதல் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.