×

ஈஸ்டர் திருநாைளயொட்டி ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை

அரியலூர்,ஏப்.23: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே வீரமாமுனிவரால் கட்டப்பட்டதும், தமிழ்நாடு சுற்றுலா தலங்களில் ஒன்றானதும், கிறிஸ்தவ ஆலயங்களில் பழமை வாய்ந்ததுமான ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை திருத்தலத்தில் ஈஸ்டர் திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.  இறைவன் இயேசு சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தி உயிர் துறந்த இந்த வெள்ளி உலகில் வாழும் கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளி என கடைபிடிக்கப்படுகிறது.இந்த புனித வெள்ளி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கடைபிடிக்கபட்டது.

இதைத்தொடர்ந்து ஈஸ்டர் திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் திருமானூர் புனித அருளானந்தர் ஆலயம், புதுக்கோட்டை தூய மங்கள அன்னை ஆலயம், குலமாணிக்கம், கோக்குடியில் உள்ள புனித இஞ்ஞாசியார் ஆலயங்கள் உள்ளிட்ட திருமானூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Easter Thirunalai ,Alakurichchi Shelter Mother Square ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது