×

மாங்கணாம்பட்டு சித்தி விநாயகர் ஆலயத்தில் கஞ்சி வார்த்தல் விழா

கொள்ளிடம், ஏப்.23: கொள்ளிடம் அடுத்த மாங்கணாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள சித்திவிநாயகர், சப்தகன்னிகள், சிங்கமுககாளி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்புஅபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபராதனையும் நடைபெற்றது.பின்னர் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை மாங்கணாம்பட்டு கிராம நாட்டாண்மைகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Tags : Ganjam Vellal ,ceremony ,Manthambatti Siddhi Vinayaka Temple ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா