×

கார் மோதி பெண் பலி

கரூர், ஏப். 23: கரூர் அருகே  நடந்து சென்ற பெண் கார் மோதி  பலியானார். கரூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி(50). இவர், நேற்று முன்தினம் மாலை பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது, எதிரே வந்த கார்  ஜெயக்கொடி மீது மோதியது. இதில், படுகாயமடைந்தவர் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார், காரை ஓட்டி வந்த ஆண்டிச்சாமி என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்