×

தொடக்க கல்வி பட்டயத்தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்

கரூர், ஏப்.23: தொடக்க கல்வி பட்டயத்தேர்வெழுதியவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக்கல்வி பட்டயத்தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சிபெற்று முதலாமாண்டு, இரண்டாம்ஆண்டு தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவியர்கள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் இன்று (23ம்தேதி) முதல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு