×

திருமாநிலையூர் -ராயனூர் வரை சாலையில் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

கரூர், ஏப். 23: கரூர் திருமாநிலையூர் பகுதியில் இருந்து ராயனூர் வரை கூடுதலாக தெரு விளக்கு வசதி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் இருந்து ராயனூர் வரை குறிப்பிட்ட தூரம் காட்டுப்பகுதியாக உள்ளது. திருமாநிலையூர் குடியிருப்பினை தாண்டியதும், தில்லை நகர் வரை இந்த சாலையோரம் தெரு விளக்கு வசதி குறைவாக உள்ளதால், நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.இரவு நேரங்களில் டெக்ஸ்டைல்ஸ் போன்ற பகுதிகளில் பணியாற்றி விட்டு இந்த சாலையில் தான் ராயனூர், தாந்தோணிமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட தூரம் வரை இருட்டாகவே காணப்படுவதால் மக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, இந்த சாலையில் கூடுதலாக மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vehicle drivers ,road ,Thirumannidayoor-Rayanur ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...