×

தர்மபுரி அரசு கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம்

தர்மபுரி, ஏப்.23: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பிஏ, பிகாம், பிபிஏ, பிஎஸ்சி, பிசிஏ உள்ளிட்ட பட்ட படிப்புகளில் சேர்வதற்காக, கடந்த 12ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 19ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நேற்று காலை ஏராளமான மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, விண்ணப்பங்களை ஆர்வத்துடன் பெற்று சென்றனர். பெற்றோர் கையொப்பத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜாதி சான்றிதழ், பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், நடத்தை சான்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்களுடன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 10 வேலை நாட்களுக்குள், முதல்வர், அரசு கலைக்கல்லூரி, தர்மபுரி என்ற முகவரிக்கு நேரிலோ, தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும். நடப்பாண்டிற்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 3ம் தேதி துவங்குகிறது. வரும் ஜூன் 3ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது. இத்தகவலை கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags : Government College ,Dharmapuri ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்