×

ஓய்வூதிய பலன்கள் வழங்க கோரி கூட்டுறவு சங்க ஊழியர் உண்ணாவிரத முயற்சி

  தர்மபுரி, ஏப்.23: ஓய்வூதிய பலன்கள் வழங்கக்கோரி, கூட்டுறவு சங்க ஊழியர் உண்ணாவிரத போராட்டத்திற்கு முயன்றார்.  கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சந்திரபாபு (61). தர்மபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், இளநிலை உதவியாளராக பணியாற்றிய இவர், கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஆனால், இதுவரை இவருக்கான ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வூதிய பலன்கள் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள இவர், கடந்த 2 வருடமாக அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வருடம் உடல்நிலை பாதிக்கப்பட்ட சந்திரபாபு, கடன் வாங்கி ஆபரேஷன் செய்துள்ளார்.   இந்த கடனை திரும்ப செலுத்த முடியாமலும், குடும்ப செலவிற்கு பணம் இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து, ஓய்வூதிய பலன்களை வழங்கவில்லை என்றால் குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சந்திரபாபு அறிவித்தார். அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முன், உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு வந்த அதிகாரிகள், அவரை தடுத்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. மேலும், உரிய அனுமதி பெறாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து சந்திரபாபு உண்ணாவிரதத்தை தள்ளி வைப்பதாக கூறி விட்டு சென்றார்.

Tags : Co-operative Society ,
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்