×

லாரி மீது பைக் மோதி 2 பேர் பலி

காஞ்சிபுரம், ஏப்.23: லாரி மீது பைக் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.வேலூர் மாவட்டம் பெரும்புலிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (28). டிரைவர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த வாசுதேவன் (23). நேற்று காலை, 2 பேரும் பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு பைக்கில் புறப்பட்டனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள சித்தேரி பகுதியில் சென்றபோது, சாலையோரத்தில், எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி மீது, பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து, பாலுசெட்டி சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள், 2 பேரும் சம்பவ இறந்துவிட்டனர்.இதயைடுத்து போலீசார், சடலங்களை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...