×

சிறுமி பலாத்காரம் தலைமறைவாக இருந்த ஓட்டல் ஊழியர் கைது

காஞ்சிபுரம், ஏப்,23: காஞ்சிபுரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம், வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (45).  தனியார் ஹோட்டல் ஊழியர். கடந்த 19ம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிய கோட்டீஸ்வரன், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.  அப்போது, அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த  7 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.


இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கோட்டீஸ்வனை வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில்  காஞ்சிபுரம் அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கோட்டீஸ்வரனை, நேற்று காலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை, காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : hotel employee ,
× RELATED வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் பலி