×

சாலையோரங்களில் கொடிக் கம்பங்கள் அமைத்தால் கடுமையான நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

காஞ்சிபுரம், ஏப்.23: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலையோரங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் சாலையோரங்களில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற உத்தரவிட்டது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலையோரங்களில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டன.

ஆனால் தற்போது சாலையில் அகற்றப்பட்ட கொடிக் கம்பங்களை, சிலர் சட்ட விரோதமாக மீண்டும் அமைப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, தேர்தல் நடத்தை விதிகளின்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இனி வரும் காலங்களில் இதுபோன்று யாரேனும் சாலையோரங்களில் கொடி கம்பங்கள் அமைத்தாலோ அல்லது அமைக்க முற்பட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதியப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...