×

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பெண்ணிடம் 6பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடி,ஏப்.23: தூத்துக்குடியில் பட்டப்பகலில் பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(30). இவர் மேலமருதூரில் உள்ள தனியார் பவர் பிளாண்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர்(30). இவர்கள் இருவரும் நேற்று மாலை பரமக்குடி சென்று விட்டு  தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து பைக்கில் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் தூத்துக்குடி தாமோதரநகர் விலக்கு விஇ ரோட்டில் வந்தபோது பின்னால் ஒரே பைக்கில் 3 நபர்கள் வந்துள்ளனர்.  எதிர்பாராத விதமாக அவர்கள் ஜெனிபரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்திற்குள் தப்பி சென்றனர். பறித்து செல்லப்பட்ட நகையின் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். இது குறித்து மத்தியபாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tuticorin ,
× RELATED ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட...