கோயில் விழாவுக்கு சென்றவரின் பைக் தீவைத்து எரிப்பு

புதுக்கோட்டை,ஏப்.23: தூத்துக்குடி மேலரத வீதியை சேர்ந்தவர் முருகவேல் மகன் இன்னாசிமுத்து என்ற கமலேசன் (35). தொழிலாளி. இவர் புதுக்கோட்டை அருகேயுள்ள குலையன்கரிசலில் நடந்த கோயில் திருவிழாவுக்கு பைக்கில் சென்றார். அப்போது அங்குள்ள வீடுமுன் தனது பைக்கை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே புதுக்கோட்டை அருகேயுள்ள 48 கண்மாய் பகுதியில் கமலேசனின் பைக் தீ வைத்து எரிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மர்ம நபர்கள், பைக்கை கடத்தி சென்று தீவைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை எஸ்.ஐ. அந்தோணிராஜா வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகிறார்.

Related Stories: