×

குளத்தூர் அருகே பைக் மோதி முதியவர் பலி

குளத்தூர்,ஏப்.23: குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பைக் மோதி முதியவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். குளத்தூர் அருகே வேப்பலோடை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆத்தியப்பன்(67) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வேப்பலோடை கிழக்கு கடற்கரைசாலை பஜாரிலிருந்து சாலையை கடக்க முயன்றபோது அந்தவழியாக மேல்மாந்தையை சேர்ந்த வெள்ளச்சாமி மகன் மகேந்திரகுமார்(23) ஓட்டிவந்த பைக் ஆத்தியப்பன் மீது மோதியதில் தூக்கிவீசப்பட்டு ஆத்தியப்பன் பலத்த காயமடைந்தார். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆத்தியப்பன் உயிரிழந்தார். தகவலறிந்ததருவைகுளம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Koothur ,
× RELATED பைக் மீது வேன் மோதி 3 மாணவர்கள் பலி