நாங்குநேரியில் ரயிலில் அடிபட்டு பெயின்டர் பலி

நாங்குநேரி, ஏப். 23: நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வந்த ஹாபா விரைவு ரயில், நாங்குநேரி யூனியன் அலுவலகம் அருகே திடீரென நின்றது. அப்போது இன்ஜின் டிரைவர், நாங்குநேரி ரயில்வே ஸ்டேசன் அருகில் தண்டவாளத்தில் ஆண் உடல் கிடப்பதாக தகவல் தெரிவித்தார். தகவலறிந்த நாங்குநேரி போலீசார் மற்றும் நாகர்கோவில் ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினர்.  விசாரணையில், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் பரப்பாடி அடுத்த இலங்குளத்தை சேர்ந்த ஆண்டவர் மகன் ரசன்(24) என்பதும், பெயின்டரான இவர், குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் இரவு பைக்கில் நாங்குநேரி வந்ததும் தெரிய வந்தது. யூனியன் அலுவலகம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு நாகர்கோவிலில் இருந்து நெல்லை சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: