சங்கரன்கோவிலில் கணவரை கத்தியால் குத்திய மனைவி, தாயுடன் கைது

சங்கரன்கோவில், ஏப். 23: சங்கரன்கோவிலில் கணவரை கத்தியால் குத்திய மனைவி, தாயுடன் கைது செய்யப்பட்டார்.நெல்லை மாவட்டம் திருவேங்கடம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன் (44). இவருக்கும், சங்கரன்கோவில் பாரதி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் மாலா (34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் மாலா, கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஓராண்டாக தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் செந்தூர் பாண்டியன், தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக சங்கரன்கோவில் வந்தார். மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை வரும்படி அழைத்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாலா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து செந்தூர்பாண்டியன் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த செந்தூர்பாண்டியன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து செந்தூர்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குபதிந்து மாலா, அவரது தாய் பாஞ்சாலியை கைது செய்தனர்.

Related Stories: