தம்பதி மீது தாக்குதல் 6 பேர் மீது வழக்கு

திருவேங்கடம், ஏப். 23: திருவேங்கடம் அருகே தம்பதியை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.திருவேங்கடம் அருகே வெள்ளாகுளம் கிராமத்தில் மேற்கு பகுதியில் காலனி உள்ளது. இங்குள்ள காளியம்மன் கோயில் முன்பு கருப்பசாமி சிலை வைத்து வழிபாடு நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்கு கோயில் அருகே வசித்து வரும் சுப்பையா (60), அவரது மகன் செந்தில்குமார் (40) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காலனியை சேர்ந்த கருப்பசாமி (55), அவரது மனைவி சுப்பம்மாள் (50) ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கருப்பசாமி மகன் பாலமுருகன் (30), திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். சுப்பையா, மகன் செந்தில்குமார், அவரது உறவினர்கள் கனிமாரியப்பன்(55), அவரது மகன்கள் மணிகண்டன்(22), மகேந்திரன்(26) மற்றும் கருப்பசாமி (50) ஆகியோர் மீது எஸ்ஐ அய்யனார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: