புளியங்குடியில் கார் விபத்தில் வாலிபர் பலி

புளியங்குடி, ஏப். 23:  புளியங்குடி காலாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் பால்தினகரன்(32). இவர், தனது நண்பர்களான இதே பகுதியை சேர்ந்த கணேசன் (42), கருப்பசாமி (47) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை சங்கரன்கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். புளியங்குடி சிந்தாமணி, கோவிந்தபேரி குளத்துக்கரை அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது எதிரே வந்த தனியார் கல்லூரி வாகனம் மீது கார் மோதியது.இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பால்தினகரன், புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். படுகாயம் அடைந்த கணேசன், நெல்லை அரசு மருத்துவமனையிலும், கருப்பசாமி தென்காசி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புளியங்குடி சப்- இன்ஸ்பெக்டர் குருசந்தவடிவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: