×

தென்காசியில் ஐவர் கால்பந்து போட்டி நாசரேத் அணிக்கு முதல் பரிசு

தென்காசி, ஏப். 23:   தென்காசி கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான சாரல் கோப்பை ஐவர் கால்பந்து போட்டிகள், தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருநாட்கள் நடந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோவை, தஞ்சை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நேற்று முன்தினம் மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தார். அரசு வழக்கறிஞர் கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், முகிலன், தலைமை ஆசிரியர்கள் செந்தூர்பாண்டி, கதிர்வேல்முருகன் முன்னிலை வகித்தனர். கால்பந்து கழக செயலாளர் டாக்டர் பிஸ்வாஸ் வரவேற்றார். போட்டியில் முதலிடம் பெற்ற நாசரேத் மர்காசிஸ் அணியினருக்கு குற்றாலம் குடியிருப்பு சுப்பிரமணியன் - பாக்கியத்தம்மாள் நினைவு கோப்பை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் நெல்லை முகிலன் சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்.

2ம் இடம் பெற்ற சிவகாசி வினோத்குமார் எப்சி அணியினருக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம், வல்லம் அப்துல்மஜீத் பரிசுக்கோப்பை வழங்கினர். மூன்றாமிடம் பெற்ற தேனி பியூச்சர் அணியினருக்கு தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்க மாநில துணை தலைவர் சிதம்பரமும், நான்காமிடம் பெற்ற ராஜபாளையம் ஆர்.எப்.சி. அணியினருக்கு ஆறுமுகநயினாரும் பரிசு வழங்கினார்.
விழாவில் முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் நிஷார்முகம்மது, சமீர், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்க மாவட்ட துணை தலைவர் சேக்தாவூது, வக்கீல் இசக்கிராஜ், மதியழகன், காமேஷ், பழனிகுமார், முருகேசன், எட்வின், நவாஸ், அஜீஸ், வேல்பாண்டி, அமீர்நவ்ஷத், திருப்பதி, உமாமகேஷ், முகம்மது அசன்சித்திக், பக்ருதீன், ரவீந்திரன், கார்த்திக், பாலசுப்பிரமணியன், லட்சுமணன், ரஷீத், ஹெபிரியேல்டென்சிலின் கணேஷ், உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தென்காசி கால்பந்து கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Tenkasi ,Nazareth Football Tournament ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...