×

பைக் மீது வேன் மோதி இளம்பெண் பலி

நெல்லை, ஏப். 23:  சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர் மதன் (30). இவரும், உறவினரான தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த மேகலாவும் (25) நேற்று மாலை பைக்கில் ஆழ்வார்திருநகரிக்கு வந்து கொண்டிருந்தனர். அதே வேளையில் அம்பையை சேர்ந்த  முருகன் (45) என்பவர் தனது வேனில் அதே பகுதியைச் சேர்ந்த 13 பக்தர்களுடன் திருச்செந்தூருக்கு சென்றுவிட்டு  ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாளை கிருஷ்ணாபுரம் அருகே வந்தபோது மதனின் பைக் மீது பயணிகள் வேன் நேருக்கு நேர் மோதியதோடு ஆராய்ச்சி நிலைய அலுவலக வாசலில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மேகலா இறந்தார்.  தகவலறிந்து  வந்த சிவந்திபட்டி போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்தில் உயிருக்குப் போராடிய மதனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags : Van ,teenager ,
× RELATED வியட்நாமை உலுக்கிய நிதி மோசடி வழக்கு; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை