×

தூக்கிட்டு இளம்பெண் சாவு

அருமனை, ஏப். 23: அருமனை அருகே ஆலறவிளை பகுதியை சேர்ந்தவர் நகுலன். டிரைவர். இவரது மனைவி அர்ச்சனா (28). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். தம்பதிக்கு மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. 2வது குழந்தை பிறந்து 80 நாட்களே ஆகியுள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் அர்ச்சனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சப்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய அர்ச்சனாவை மீட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அர்ச்சனா நேற்று காலை இறந்தார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : lady ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...