சிறுமியை கடத்தி வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம்? 7 பேரிடம் போலீசார் விசாரணை ஒடுகத்தூர் அருகே

அணைக்கட்டு, ஏப். 23: அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த மலைப்பகுதியில் சிறுமியை கடத்தி வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் கூறப்படும் சம்பவத்தில் 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அருகே உள்ள மலைப்பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. சிறுமியின் தந்தைக்கும், அதே பகுதியில் உள்ள ஆண்டி என்பவரின் குடும்பத்தாருக்கும் வீட்டு மனை தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்ததாம். இந்நிலையில், கடந்த 20ம் தேதி மீண்டும் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆண்டியின் மகன்களான குமார், சேட்டு, அண்ணாமலை மற்றும் அண்ணாமலையின் மகன் வேலு, உறவினர் ரவி ஆகியோர் சிறுமியின் தந்தையை சரமாரியாக தாக்கினார்களாம்.

இந்நிலையில் அன்று மாலை சிறுமியை கடத்தி சென்று ரவியின் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி காணாமல் போனதை அடித்து, நேற்று முன்தினம் அவரும், சிறுமியின் தாத்தா மற்றும் உறவினர்கள் ரவி வீட்டிற்கு சென்று அவரிடம் தட்டிக்கேட்டனர். அப்போது ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, அங்கிருந்த குமாரை கத்தியால் குத்தினாராம். இதையடுத்து அவர்கள் சிறுமியின் தாத்தைவையும் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த குமார் மற்றும் சிறுமியின் தாத்தா, மேலும், ரவியின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமிையயும் பொதுமக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் தந்தை மற்றும் ஆண்டி, சேட்டு, அண்ணாமலை, வேலு, ரவி உட்பட 7 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, வேப்பங்குப்பம் போலீசார் வேலூர் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியின் மருத்துவ அறிக்கையை வந்தவுடன் உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

Related Stories: