வேலூர், ஏப்.23:வேலூர், ராணிப்பேட்டை வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பிற்கு கூடுதலாக 20 அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம்தேதி நடந்து முடிந்தது. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி, சோளிங்கர் சட்டமன்ற ெதாகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் உள்ள மையத்திலும் ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்த இரண்டு இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.வேலூர் எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில், தந்தை பெரியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 3 ஷிப்ட்கள் அடிப்படையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ராணிப்பேட்டையில் டிஎஸ்பி கலைசெல்வன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப்பணியை மேற்கொண்டு உள்ளனர்.