ராணிப்பேட்டை, ஏப்.23: பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு இழப்பீடு வழங்காததால் ராணிப்பேட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்யவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன். அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை பெல் நிறுவனத்திற்கு கடந்த 1981ம் ஆண்டு வருவாய்த்துறையினர் கையகப்படுத்தனர். இதற்கான தொகை ₹27 ஆயிரத்தை 3 மாதத்தில் வழங்குவதாக கூறினர். ஆனால், இந்த பணத்தை பெல் நிறுவனம் வழங்கவில்லை. இதனால், ஆனந்தன் கடந்த 1984ம் ஆண்டு வேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 1991ம் ஆண்டு ராணிப்பேட்டை நீதிமன்றத்துக்கும், பின்னர், அங்கிருந்து நிலம் தொடர்பான வழக்கு விசாரிக்கும் அரக்கோணம் நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டது.