திருப்புவனம். ஏப்.23: திருப்பாசேத்தி வைகை வடகரையில் உள்ள மயானத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதில் மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அவல நிலை உள்ளது. மேலும் மயானத்தில் பொதுமக்கள் குளிப்பதற்காக கடந்த 2016-17ல் ரூ.1 லட்சம் செலவில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குளியல் தொட்டி கடந்த ஒரு வருடமாக பயன்பாடின்றி கிடக்கிறது எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மயான சாலையை சீரமைக்கவும், குளியல் தொட்டிக்கு தண்ணீர் வசதி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.