×

தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

பழநி, ஏப். 23: கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து இம்முறை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் அதிகளவு தீவிபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பழநி பகுதியில் குடிசை பகுதிகள் அதிகமாக உள்ள பகுதிகளில் தற்போது பெட்காட் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர். தவிர, பள்ளிகளிலும் மாணவர்களிடம் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தீ ஏற்படும் வழிமுறைகள், தீ விபத்தின் வகைகள், சமையல் செய்யும்போது எவ்வாறு தீ விபத்தினை தடுப்பது?, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும், தீ விபத்து ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு