மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி படுகாயம்

திருப்பூர்,ஏப்.22:  திருப்பூர் கேட்டம், ஊத்துக்குளி கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர் முரளி (29). இவர் நேற்று முன் தினம் ஊத்துக்குளி செட்டிபாளையம், நடுத்தோட்டம் டிரான்ஸ்பார்மரில் பணியாற்றி கொண்டிருந்தார். முறையாக பாதுகாப்பு கவசமின்றி வேலை செய்ய வைத்ததால் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கிழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தொமுச நிர்வாகி சரவணன் கூறுகையில், ‘மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் உள்ள ஒப்பந்த ஊழியருக்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் காலம் கடத்தினால் தொமுச சார்பில் போராட்டம் நடத்தப்படும்’ என தெரிவித்தார்

Related Stories: