×

தீத்தடுப்பு வார விழா விழிப்புணர்வு

பொள்ளாச்சி, ஏப். 22: பொள்ளாச்சி தீணைப்பு மற்றும் மீட்பு குழு மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதங்களில் தீத்தடுப்பு வாரவிழா நடத்தப்பட்டு தீ தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் தீத்தடுப்பு வார விழா மற்றும் தேசிய தீயணைப்பு தொண்டுநாள் விழா கடந்த 14ம் தேதி  துவங்கியது. இந்நிகழ்ச்சி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தீத்தடுப்பு வார விழாவை முன்னிட்டு, பாலக்காடு ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடுகளில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களிலும், பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்களிலும் பொதுமக்களுக்கு  தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோக பணியில் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டனர். மேலும் பல இடங்களில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு  செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்