கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

பொள்ளாச்சி, ஏப்.22:பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பெங்காளியூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (45) கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு வைதேகி என்ற ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வைதேகிக்கு திருமணமாகி விஷ்ணு பிரசாத்(5), வித்யா(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 15ம் தேதி அம்சவேணியிடம் சுப்ரமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த  சுப்ரமணியன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்தகாயமடைந்த அவரை  உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: