கேரளாவில் நாளை வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரம் நிறைவு

பாலக்காடு, ஏப்.22: கேரளாவில் கடந்த மார்ச் 15ம் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வந்த நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. கேரளாவில் பாலக்காடு, ஆத்தூர் தொகுதிகள் உட்பட 20 தொகுதிகளுக்கு நாளை ( 23ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குபதிவு  நடைபெறுகிறது. தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் ஆணைய அலுவலங்களிலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் விநியோகம் நடைபெற்று உள்ளது. பாலக்காடு, ஆலத்தூர் மக்களவை தொகுதிகளில் 25 லட்சத்து 85 ஆயிரத்து 181 வாக்காளர்கள் நாளை மறுநாள் வாக்கு செலுத்த உள்ளனர். இதில் 41 ஆயிரத்து 71 பேர் புது வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: