கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த வாழப்பாடி பெண்ணின் உடல் சொந்த ஊரில் தகனம்

வாழப்பாடி, ஏப்.22: திருச்சி அருகே துறையூர் முத்தம்பாளையத்தில், வண்டி கருப்புசாமி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவில் நேற்று காலை பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இவர்களில், வாழப்பாடி அருகே திருமனூரைச் சேர்ந்த செல்வம் மனைவி கந்தாயி(48) என்பவரும் ஒருவர். கோயிலுக்கு சென்ற இவர், படிக்காசு வாங்குவதற்காக நேற்று காலை கோயில் வளாகத்தில் கூட்டத்தோடு கூட்டமாக காத்திருந்தார். அப்போது, நெரிசலில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். துறையூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட கந்தாயியின் உடல், நேற்று மாலை சொந்த ஊரான வாழப்பாடி திருமனூருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தியதையடுத்து, அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நேற்றிரவு அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உயிரிழந்த கந்தாயிக்கு 2 மகன்கள், ஒரு மகன் உள்ளனர்.

Related Stories: