அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் பட்டாபிஷேகம்

சேலம், ஏப்.22: சேலம் அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக உற்சவம் நடந்தது. நேற்று காலை கோமாதா பூஜையும், மூலவர் ராமர், சீதா, லட்சுமணனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. காலை 9 மணி மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் சீர்வரிசை அழைப்பு நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு கோதண்ட ராமருக்கும், சீதாலட்சுமிக்கும் திருக்கல்யாணம், பட்டாபிஷேக உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை சுதர்சன பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அதை தொடர்ந்து அன்னதானமும், மாலை 5 மணியளவில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: