சேலம் நெத்திமேட்டில் டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கிய 7 பேர் கைது

சேலம், ஏப்.22:  சேலம் நெத்திமேட்டில் இருந்து கொண்டலாம்பட்டி போகும் வழியில் கடல் என்ற டாஸ்மாக் பார் இருக்கிறது. இங்கு நேற்று பகல் 3 மணியளவில், ஏராளமானோர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு கும்பலை சேர்ந்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் மது குடித்துக்கொண்டிந்தவர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இதற்குள் பாரில் உள்ள கண்ணாடி மற்றும் பொருட்கள் உடைக்கப்பட்டது. அங்கிருந்த கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து சென்றனர். பார் கதவு மூடப்பட்டது. அங்கு மோதிக்கொண்ட பிரகாஷ்(28), சக்திவேல்(29), முரளி(21), சிவா என்ற சிவக்குமார்(31), மோகன்ராஜ்(27), சங்கர்(30), ஜீவானந்தம்(26) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள், நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என பந்தயம் கட்டியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடி மோதலாக உருவானது தெரியவந்தது.

Related Stories: