தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி போலீசார் 100 பேர் வயநாடு பயணம்

திருச்சி, ஏப்.22:  தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி போலீசார் 100 பேர் கேரள மாநிலம் வயநாடுக்கு பயணம் மேற்கொண்டனர். கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளில் ஏப்.23ம் தேதி (நாளை) 3ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் ஒன்று. ராகுல் காந்தி போட்டியிடுவதால், வயநாடு தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், திருச்சியில் இருந்து 100 போலீசார் வயநாடு தொகுதியில் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர். காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையில் போலீசார் 3 பஸ்களில் வயநாடு சென்றுள்ளனர். தேர்தல் முடிந்ததும் 24ம் தேதி இவர்கள் திருச்சி திரும்புகின்றனர்.

Related Stories: