துவரங்குறிச்சி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

மணப்பாறை, ஏப்.22:  துவரங்குறிச்சி அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். துவரங்குறிச்சி அருகே மருங்காபுரி ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராசிப்பட்டியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால், பெண்கள் நீண்ட தூரம் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து வந்தனர். இதுகுறித்து பல முறை கிராம மக்கள் புகார் செய்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசாரும், மருங்காபுரி ஒன்றிய அதிகாரி தீனதயாளனும் மறியிலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: