பன்னிரு திருமுறை முற்றோதுதல்

ஈரோடு, ஏப். 22:  சேலம் மாவட்டம் ஆனைக்கட்டி திருமுறை சேவா மையம் மற்றும் சேலம் திருமுறை திருக்காவணம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், ஈரோடு ஆயிர நகர வைசியர் திருமண மண்டபத்தில் நேற்று ஞாலம் அளந்த பன்னிரு திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.

இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஓதுவார்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகம் ஆகியோரின் பன்னிரு திருமுறை பாடல்களை பாடி விளக்கம் அளித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அரிகரதேசிக ஓதுவார் மூர்த்திகள் தலைமை தாங்கி சொற்பொழிவாற்றினார். இவ்விழாவில் ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: