ஈரோடு, ஏப். 22: ஈரோடு கச்சேரி வீதியில் நேற்று முன்தினம் காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மதுபோதையில் கீழே விழுந்து காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் அந்த நபரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.