வாலிபர் தற்கொலை

ஈரோடு, ஏப். 22:   ஈரோடு வைராபாளையம் பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம். இவருடைய மனைவி மல்லிகா (43). இவர்களது மகன் பாரத் (25). கட்டிட தொழிலாளி. பாரத் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகியதால், அந்த பெண் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பாரத் மனவேதனையில் இருந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு பாரத் வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டிற்கு வந்த மல்லிகா, பாரத்தை தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாரத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாரத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் நேற்று முன்தினம் மல்லிகா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: