தஞ்சை, ஏப். 22: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றால் பாமக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவக்குமார் தெரிவித்துள்ளார்.இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றகழக நிறுவனத் தலைவர் சதாசிவக்குமார் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மிகப்பெரிய கலவரம் நடந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை வாக்களிக்க விடாமல் பாமகவினர் வன்முறையை கட்டவிழ்த்து உள்ளனர். தலித் சமூகத்தை சேர்ந்த பெண்களை மானபங்கம் செய்துள்ளனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த பதிலும் தராமல் மவுனம் காத்து வருகிறது. 100 சதவீதம் நேர்மையாகவும், உண்மையாகவும் வாக்களிக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.