×

மழை நீரால் புத்தகங்கள் பழுதாகிறது ஓட்டு கட்டிடத்தில் செயல்படும் மண்மங்கலம் கிளை நூலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?

கருர், ஏப். 22: ஓட்டு கட்டிடத்தில் செயல்படும் மண்மங்கலம் கிளை நூலகத்தை புதிய கட்டிடத்தில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் கடந்த பல ஆண்டுகளாக கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. காலை 9மணி முதல் 12.30மணி வரையிலும், மாலை 3மணி முதல் 6மணி வரையிலும் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.இந்த நூலகத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. ஏராளமான வாசகர்கள் உள்ளனர்.   கிளை நூலகமாக தரம் உயர்த்தபட்டு செயல்பட்டு வரும் இந்நூலகம் பஞ்சாயத்துக்கு அலுவலகத்துக்கு சொந்தமான சாதாரண ஓட்டு கட்டிடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.ஆபத்தான நிலையில் இந்த கட்டிடம் உள்ளதால், வாசகர்கள் ஒரு வித பயத்துடனே  வந்து  நூல்களை படித்து வருகின்றனர். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்கள் அனைத்தும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும், லேசான மழை பெய்தாலே, ஓட்டு கட்டிடத்தின் மேற்புர பகுதியில் இருந்து மழைநீர் உள்ளே புகுந்து, புத்தங்கள் பழுதாகும் சம்பவங்களும் இங்கு அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்த நூலகத்தை புதிய கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக வாசகர் வட்டத்தினர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஆனால்,  நூலகத்தை வேறு கட்டிடத்துக்கு மாற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்கள், படிக்க வரும் வாசகர்களின் நிலை போன்றவற்றை கவனத்தில் கொண்டு, பழுதடைந்த கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த கிளை நூலகத்தை உடனடியாக வேறு கட்டிடத்துக்கு மாற்ற அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என  வாசகர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...